3049தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
      தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழல் கால் அசுரர்க்குத்
      தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக்கொள்ளப் பாடி
      பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகில் பிறப்பார்
      வல்வினை மோத மலைந்தே             (2)