3053மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
      மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னை
      தடங் கடல் சேர்ந்த பிரானை
கனியை கரும்பின் இன் சாற்றை
      கட்டியை தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
      முழுது உணர் நீர்மையினாரே             (6)