3057கருமமும் கரும பலனும்
      ஆகிய காரணன் தன்னை
திரு மணி வண்ணனை செங்கண்
      மாலினை தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
      உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து
      பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே             (10)