3060மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
      மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானை
      தடங் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனை தென் இலங்கை
      எரி எழச் செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடங்
      கண்ணனைப் பரவுமினோ             (2)