முகப்பு
தொடக்கம்
3061
பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனை பரஞ்சோதியை
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனை குடக் கூத்தனை
அரவம் ஏறி அலை கடல்
அமரும் துயில்கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ (3)