3061பரவி வானவர் ஏத்த நின்ற
      பரமனை பரஞ்சோதியை
குரவை கோத்த குழகனை மணி
      வண்ணனை குடக் கூத்தனை
அரவம் ஏறி அலை கடல்
      அமரும் துயில்கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
      ஏத்துதல் மனம் வைம்மினோ             (3)