3064தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்
      அவன் ஒரு மூர்த்தியாய்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்
      கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்
      ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை
      யான் இலேன் எழுமைக்குமே             (6)