3065எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்
      அமுதத்தினை எனது ஆர் உயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி
      வண்ணனை குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர்
      விழுங்கும் கன்னல் கனியினை
தொழுமின் தூய மனத்தர் ஆய்
      இறையும் நில்லா துயரங்களே             (7)