முகப்பு
தொடக்கம்
3067
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு
தானும் ஆய் அவை அல்லன் ஆய்
எஞ்சல் இல் அமரர் குலமுதல்
மூவர் தம்முள்ளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்
அவன் இவன் என்று கூழேன்மின்
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன்
ஆகும் நீள் கடல் வண்ணனே (9)