3103சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு
      சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள்
      தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை
      மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற
      நான் ஓர் குறைவு இலனே (1)