3106பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று
      படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும்
      அங்கியும் போர் தொலைய
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
      ஆயனை பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான்
      இறையேனும் இடர் இலனே (4)