3108துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
      நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
      தோன்றி கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்
      புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற
      யான் ஓர் துன்பம் இலனே (6)