3109துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
      ஆய் உலகங்களும் ஆய்
இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான்
      சுவர்க்கங்களும் ஆய்
மன் பல் உயிர்களும் ஆகி பலபல
      மாய மயக்குக்களால்
இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று
      ஏதும் அல்லல் இலனே (7)