3111துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி
      துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து
      வேண்டும் உருவு கொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும்
      எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று
      ஒன்றும் தளர்வு இலனே (9)