முகப்பு
தொடக்கம்
3137
பூசும் சாந்து என் நெஞ்சமே
புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே
வான் பட்டு ஆடையும் அஃதே
தேசம் ஆன அணிகலனும்
என் கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த
எந்தை ஏக மூர்த்திக்கே (2)