3137பூசும் சாந்து என் நெஞ்சமே
      புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே
      வான் பட்டு ஆடையும் அஃதே
தேசம் ஆன அணிகலனும்
      என் கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த
      எந்தை ஏக மூர்த்திக்கே             (2)