3142குரை கழல்கள் நீட்டி மண்
      கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள்
      கூட நின்ற மாயனே
விரை கொள் பூவும் நீரும் கொண்டு
      ஏத்தமாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திரு உருவம்
      என்னது ஆவி மேலதே             (7)