3144உரைக்க வல்லேன் அல்லேன் உன்
      உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்?
      காதல் மையல் ஏறினேன்
புரைப்பு இலாத பரம்பரனே
      பொய் இலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள்
      ஏத்த யானும் ஏத்தினேன்             (9)