3145யானும் ஏத்தி ஏழ் உலகும்
      முற்றும் ஏத்தி பின்னையும்
தானும் ஏத்திலும் தன்னை
      ஏத்த ஏத்த எங்கு எய்தும்?
தேனும் பாலும் கன்னலும்
      அமுதும் ஆகித் தித்திப்ப
யானும் எம் பிரானையே
      ஏத்தினேன் யான் உய்வானே             (10)