3146உய்வு உபாயம் மற்று இன்மை தேறி
      கண்ணன் ஒண் கழல்கள் மேல்
செய்ய தாமரைப் பழனத்
      தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய் இல் பாடல் ஆயிரத்துள்
      இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து
      விண்ணும் ஆள்வர் மண்ணூடே             (11)