3147மண்ணை இருந்து துழாவி
      வாமனன் மண் இது என்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு
      வைகுந்தம் என்று கை காட்டும்
கண்ணை உள்நீர் மல்க நின்று
      கடல்வண்ணன் என்னும் அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
      என் செய்கேன் பெய் வளையீரே?             (1)