3153ஏறிய பித்தினோடு எல்லா
      உலகும் கண்ணன் படைப்பு என்னும்
நீறு செவ்வே இடக் காணில்
      நெடுமால் அடியார் என்று ஓடும்
நாறு துழாய் மலர் காணில்
      நாரணன் கண்ணி ஈது என்னும்
தேறியும் தேறாதும் மாயோன்
      திறத்தனளே இத் திருவே             (7)