முகப்பு
தொடக்கம்
3153
ஏறிய பித்தினோடு எல்லா
உலகும் கண்ணன் படைப்பு என்னும்
நீறு செவ்வே இடக் காணில்
நெடுமால் அடியார் என்று ஓடும்
நாறு துழாய் மலர் காணில்
நாரணன் கண்ணி ஈது என்னும்
தேறியும் தேறாதும் மாயோன்
திறத்தனளே இத் திருவே (7)