3154திரு உடை மன்னரைக் காணில்
      திருமாலைக் கண்டேனே என்னும்
உரு உடை வண்ணங்கள் காணில்
      உலகு அளந்தான் என்று துள்ளும்
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்
      கடல் வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்
      கண்ணன் கழல்கள் விரும்புமே             (8)