3156அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி
      அகலவே நீள் நோக்குக் கொள்ளும்
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
      வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்
பெயர்த்தும் கண்ணா என்று பேசும்
      பெருமானே வா என்று கூவும்
மயல் பெருங் காதல் என் பேதைக்கு
      என்செய்கேன் வல்வினையேனே?             (10)