3213ஒன்றும் தேவும் உலகும் உயிரும்
      மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர்
      உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு
      திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே?             (1)