3215பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று
      உடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது
      கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும்
      திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம்
      மற்று இல்லை பேசுமினே             (3)