3216பேச நின்ற சிவனுக்கும் பிரமன்
      தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நல் மோக்கத்துக்
      கண்டுகொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய
      திருக்குருகூர் அதனுள்
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது
      இலிங்கியர்க்கே?             (4)