3217இலிங்கத்து இட்ட புராணத்தீரும்
      சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும்
      தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும்
      திருக்குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும்
      பொய் இல்லை போற்றுமினே             (5)