முகப்பு
தொடக்கம்
3220
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட
மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது
நாராயணன் அருளே
கொக்கு அலர் தடம் தாழை வேலித்
திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத்
தெய்வம் விளம்புதிரே (8)