3221விளம்பும் ஆறு சமயமும் அவைஆகியும்
      மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய
      ஆதிப்பிரான் அமரும்
      வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய
      திருக்குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை
      உய்யக்கொண்டு போகுறிலே             (9)