3236கண்டோம் கண்டோம் கண்டோம்
      கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
      தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டு ஆர் தண் அம் துழாயான்
      மாதவன் பூதங்கள் மண்மேல்
பண் தான் பாடி நின்று ஆடி
      பரந்து திரிகின்றனவே             (2)