3237திரியும் கலியுகம் நீங்கி
      தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றி
      பேரின்ப வெள்ளம் பெருக
கரிய முகில்வண்ணன் எம்மான்
      கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்து இசை பாடி
      எங்கும் இடம் கொண்டனவே             (3)