முகப்பு
தொடக்கம்
3239
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே
ஒக்கின்றது இவ் உலகத்து
வைகுந்தன் பூதங்களே ஆய்
மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்
அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர்
ஊழி பெயர்த்திடும் கொன்றே (5)