3240கொன்று உயிர் உண்ணும் விசாதி
      பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் உலகில் கடிவான்
      நேமிப் பிரான் தமர் போந்தார்
 நன்று இசை பாடியும் துள்ளி
      ஆடியும் ஞாலம் பரந்தார்
 சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!
      சிந்தையைச் செந்நிறுத்தியே (6)