3241நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்
      தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனோடே கண்டீர்
      மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா
      கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி
      யாயவர்க்கே இறுமினே             (7)