3242இறுக்கும் இறை இறுத்து உண்ண
      எவ் உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக
      அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன்
      பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்
      மேவித் தொழுது உய்ம்மின் நீரே             (8)