3243மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள்
      வேதப் புனித இருக்கை
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை
      ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும்
      சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும்
      பகவரும் மிக்கது உலகே             (9)