3245கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்
      அடியார்க்கு அருள்செய்யும்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி
      மாயப் பிரான் கண்ணன் தன்னை
கலி வயல் தென் நன் குருகூர்க்
      காரிமாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து
      உள்ளத்தை மாசு அறுக்குமே             (11)