3269என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்
      என்னை முனியாதே
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும்
      மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும்
      வந்து எங்கும் நின்றிடுமே             (2)