3270நின்றிடும் திசைக்கும் நையும் என்று
      அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும்
      சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா
      நெஞ்சுள்ளும் நீங்காவே             (3)