3282செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
      செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
      செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
      செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
      செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
      செய்ய கனி வாய் இள மான் திறத்தே?            (4)