3294எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ
      தெவ்வத்துள் ஆயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்
      சிரீவரமங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே             (5)