3295ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும்
      என்னை ஆளுடை
வான நாயகனே மணி மாணிக்கச்சுடரே
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்
      கைதொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே             (6)