3300தெய்வ நாயகன் நாரணன்
      திரிவிக்கிரமன் அடி இணைமிசை
கொய் கொள் பூம் பொழில்
      சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண்
      சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார்
      வானோர்க்கு ஆரா அமுதே             (11)