3332கூடி நீரைக் கடைந்த ஆறும் அமுதம் தேவர்
      உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி
      உண்டிடுகின்ற நின் தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகு அணையானே             (10)