3367குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
      குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்
      உட்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய
      வினைகளையே அலற்றி
இரவும் நன் பகலும் தவிர்கிலன்
      என்ன குறை எனக்கே?             (1)