முகப்பு
தொடக்கம்
3367
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்
உட்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய
வினைகளையே அலற்றி
இரவும் நன் பகலும் தவிர்கிலன்
என்ன குறை எனக்கே? (1)