3374நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும்
      போர்கள் செய்து
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்
      உட்பட மற்றும் பல
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என்
      அப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு
      இனி என்ன கலக்கம் உண்டே?             (8)