முகப்பு
தொடக்கம்
3377
நாயகன் முழு ஏழ் உலகுக்கும்
ஆய் முழு ஏழ் உலகும் தன்
வாயகம் புக வைத்து உமிழ்ந்து
அவை ஆய் அவை அல்லனும் ஆம்
கேசவன் அடி இணைமிசைக்
குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்து இப் பத்தால்
பத்தர் ஆவர் துவள் இன்றியே (11)