முகப்பு
தொடக்கம்
3385
திருந்து வேதமும் வேள்வியும்
திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை
வண் தொலைவில்லிமங்கலம்
கருந் தடம் கண்ணி கைதொழுத அந் நாள்
தொடங்கி இந் நாள்தொறும்
இருந்து இருந்து அரவிந்தலோசன
என்று என்றே நைந்து இரங்குமே (8)