3385திருந்து வேதமும் வேள்வியும்
      திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை
      வண் தொலைவில்லிமங்கலம்
கருந் தடம் கண்ணி கைதொழுத அந் நாள்
      தொடங்கி இந் நாள்தொறும்
இருந்து இருந்து அரவிந்தலோசன
      என்று என்றே நைந்து இரங்குமே            (8)