முகப்பு
தொடக்கம்
3387
பின்னைகொல் நில மா மகள்கொல்
திருமகள்கொல் பிறந்திட்டாள்?
என்ன மாயம்கொலோ இவள் நெடுமால்
என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து
உறையும் தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த்
திருநாமம் கேட்பது சிந்தையே. (10)