3414தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள்மேல் தும்பிகாள்
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்து அகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே?            (4)