3433உலகம் உண்ட பெருவாயா
      உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
      நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்கு ஆய் நின்ற
      திருவேங்கடத்து எம் பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம்
      கூடும் ஆறு கூறாயே             (1)